என் தோட்டத்து முள்ளும் மலரும்

2:52 PM

வெற்று தாளில்
உன் நினைவுகளால்
நிரப்ப
என் சுயநினைவுகளை
எழுப்புகிறேன்.....

தன்னிலை
மறந்ததோ,
அல்லது தன்னிறைவு
அடைந்ததோ
தெரியவில்லை...
வார்த்தைகள்
ஒலி இழக்கிறது.....

காதலில் தனிமை
கொடுமையானது,
யாரோ சொன்னது.....
யார் சொன்னது..
சுகம் தரும்
உன் நினைவுகளை
என் நினைவில்
வாழ வழிவகுப்பது
இனிமையான தனிமையே....

எந்தன் கண்ணில்
உன்னை காண்கிறேன்
எந்த பெண்ணிலும்
உன்னை காண்கிறேன்,,,
காரணம்.....................?

பெண்ணிணத்திற்கு
நீ ஒரு இலக்கணம்..
பெண்ணிணத்தில்
நீ ஒரு இலக்கியம்....


நான் எழுத
நினைக்கும்
எழுத்தாய் நீ...
எழுதும்
எழுத்தாணியும் நீ....

என் தோட்டத்து
முள்ளும் மலரும்
நீ என்னுடன்
நீயாகவே
எனக்காக இருக்கும்
பொழுது....

அழிவிலா உன்
அழகிய நினைவுகளுடன்...

You Might Also Like

0 comments

Popular Posts

Like us on Facebook

Flickr Images